1.மத்திய அரசு ஊழியர்களுக்காக புதிதாக கொண்டு வரப்பட்ட ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (யுபிஎஸ்) வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வருகிறது என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
- தேசிய ஓய்வூதிய திட்டத்தின் (NPS) கீழ் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கும் இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் பொருந்தும்.
2.குறைந்தது 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு ஓய்வு வயதுக்கு முன்பாக பெற்ற 12 மாத அடிப்படை சம்பளத்தின் சராசரியில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும் .
3.தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.
4.பணியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அல்லது ராஜினாமா செய்தவர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியம் கிடைக்காது.
5.நிதியமைச்சகத்தின் இந்த அறிவிப்பு மூலம் மத்திய அரசு ஊழியர்கள் 23 லட்சம் பேர், கடந்த 2004, ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்த தேசிய ஓய்வூதிய திட்டம், மற்றும் தற்போதைய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment